உலக பாரம்பரிய தினத்தை ஒட்டி உதகை மலை ரயிலுக்கு மலர்களால் அலங்காரம் செய்து கேக் வெட்டி கொண்டாடினர். கோவை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து உதகை செல்லும் மலை ரயில் கடந்த 1899ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அலங்காரம் செய்யப்பட்ட பழமை வாய்ந்த மலை ரயிலுக்கு மரியாதை செய்து, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதனையடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி புறப்பட்ட மலை ரயிலில் பயணிகள் உற்சாகமாக பயணித்தனர்.