மதுரை மணிநகரம் சுரங்கப்பாதை வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் அதில் சிக்கிய மூன்று பேரை பத்திரமாக போலீசார் மீட்டனர். கனமழை காரணமாக மணிநகரம் சுரங்கப்பாதை மழைநீரில் மூழ்கியதையடுத்து அவ்வழியாக சென்ற கார், ஆட்டோ, பைக் சிக்கின. இதனைதொடர்ந்து தகவலறிந்து வந்த பணியாளர்கள் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அகற்றினர்.