பக்ரைனில் கடலில் விழுந்து உயிரிழந்த மீனவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறவினர்கள் மனு அளித்தனர். பாம்பன் ஊராட்சி, காமராஜ் நகரைச் சேர்ந்த சீமோன்சன் என்பவர் குடும்ப சூழ்நிலை காரணமாக பக்ரைனுக்கு மீன்பிடித் தொழிலுக்காக சென்றார். அவர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடலை சொந்த ஊர் கொண்டு வர உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.