பெண் காவலர்களின் நிறைவேற்றப்பட்ட கூடிய கோரிக்கைகளை தமிழக அரசு நிச்சயமாக முன்னெடுக்கும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார்.செங்கல்பட்டு மாவட்டம் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் நடைபெற்ற காவல்துறை பெண்கள் தேசிய மாநாட்டில் அவர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, அனைத்து பெண் காவலர்களுக்கும் காலை ஏழு மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பணி என்றும், காவல்நிலையத்தில் பெண்காவலர்களுக்கு என ஓய்வறை உள்ளிட்ட ஒன்பது திட்டங்கள் திமுக அரசு கொண்டு வந்ததில் பெருமிதம் கொள்வதாக கூறினார்.