வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் மற்றும் பதாகைகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி இதுவரை 1,311 விளம்பரப் பலகைகள் மற்றும் 317 விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன.