செங்கல்பட்டு மாவட்டம் கைப்பட்டூர் அருகே பெண்கள் விடுதி உரிமையாளரிடம் மாமூல் கேட்டு திமுக கவுன்சிலர் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏகாட்டூர் பகுதியில் ஸ்ரீ ராம் சாய் என்ற பெயரில் செயல்படும் பெண்கள் விடுதியை, வெங்கட்ராமன் என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்த விடுதியில் உள்ள குப்பைகளை ஊராட்சி ஊழியர்கள் நான்கு நாட்களாக எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, திமுக கவுன்சிலர் மோகன்ராஜியிடம்,வெங்கட்ராமன் முறையிட்டதாக தெரிகிறது. அப்போது தமக்கு மாமூல் கொடுத்தால் தான் குப்பைகளை அகற்ற முடியும் என கவுன்சிலர் கூறியதாக சொல்லப்படுகிறது. அப்போது, மாமூல் தர மறுத்ததால் தன்னை தாக்கியதாக திமுக கவுன்சிலர் மீது விடுதி உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.