வேப்பூர் அருகே ஆட்டோவில் ரேஷன் அரிசியை கடத்திய மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அ.களத்தூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறுவதாக சிறுபாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்ததில் அதில் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து, போலீசார், ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ராஜா, பெரியசாமி மற்றும் ராஜேஷ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.