தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வந்த ராமேஸ்வரம் விரைவு ரயிலில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலில், ரயில்வே போலீசார் திடீரென சோதனை செய்தபோது, கேட்பாரற்று கிடந்த மூட்டையில் குட்கா, பான் மசாலா, புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.