நீலகிரியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த பலத்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், கோத்தகிரி, கட்ட பெட்டு, ஓர சோலை, கோடநாடு பகுதிகளில் மழை பெய்தது. தேயிலை மகசூலுக்கு ஏற்ற மழை என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.