தென்காசி மாவட்டத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், திடீரென பெய்த மழையால், குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.