விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மந்திரிஓடை, மீனாட்சிபுரம், கல்லுப்பட்டி, ஆவியூர், தரகனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.