பயணிகளுக்கு உதவுவதுபோல நடித்து கடந்த 6 வருடங்களாக உடைமைகளை திருடி வந்த ரயில்வே மெக்கானிக் பிரிவு உதவியாளரை போலீஸார் கைது செய்தனர். மதுரையில் மூதாட்டிக்கு உதவுவதுபோல நடித்து 15 சவரன் நகைகள் கொண்ட பையை திருடிச் சென்றது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஈரோடு ரயில்வே மெக்கானிக் பிரிவில் பணிபுரிந்து வரும் செந்தில்குமாரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.