கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுப்பதற்கு G Pay உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டியுள்ளதால் நோயாளிகள் சிரமமடைந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் எடுக்கப்படும் சிடி ஸ்கேன்களுக்கு 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அதை ஆன்லைனில் செலுத்தும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதால் ஸ்மார்ட் ஃபோன் இல்லாதவர்களும், கையில் பணம் வைத்திருக்கும் மக்களும் சிரமமடைகின்றனர். எனவே இந்த நடைமுறையை மாற்றி நேரடியாக பணம் செலுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.