திருநெல்வேலி மாவட்டம் அயன்சிங்கம்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் கரடி சுற்றித் திரிவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வரும் நிலையில், கரடி நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். எனினும், நிரந்தர நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.