நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் அமைதி பேரணி நடத்தினர். கேத்தி ஹேத்தை அம்மன் கோவிலிலிருந்து காந்தி சிலை வரை நடைபெற்ற இந்த அமைதி பேரணியில் பங்கேற்றவர்கள், மாநகராட்சியாக மாற்றினால் 100 நாள் வேலைதிட்டம் பாதிக்கப்படும் என்பதால் இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.