திண்டுக்கல் மாவட்டம் பழனியாண்டவர் கலைக் கல்லூரி மாணவர்களை நாற்காலியால் தாக்கியது போன்ற வீடியோ வெளியான நிலையில், அக்கல்லூரி பேராசிரியர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்து சமய அறநிலையத்துறை கீழ் செயல்படும் பழனியாண்டவர் கலைக் கல்லூரியில் 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் சுயநிதி பிரிவு வணிகவியல் பேராசிரியர் கௌதம் என்பவர் மாணவர்களை தொடர்ந்து ஆபாச வார்த்தைகளால் பேசுவதாக கூறப்படுகிறது. இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் புகார் அளித்த நிலையில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.