தென்காசியில் ஆசிரியரின் பணி அனுபவ சான்று கேட்ட தனியார் பள்ளி தாளாளரிடம் 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பணத்தை வாங்கிய போது சிக்கினார்.