மதுரையில் பைக் ரேஸில் ஈடுபட்ட தனியார் கல்லூரி மாணவர்களின் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்ட பிறகு, அங்கு பயிலும் மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டிச் சென்றனர்.