திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செல்போன் வெளிச்சத்தில் மருத்துவர்கள் சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்லடம் செஞ்சேரிமலை பகுதியில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்தில் முதியவர் ஒருவர், கால் துண்டிக்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மருத்துவர்கள் செல்போன் லைட் அடித்து சிகிச்சை செய்தனர்.