,சிவகங்கை மாவட்டம் தேவபட்டு கிராமத்தில் ஆண்கள் மட்டுமே வழிபடும் பாரம்பரிய பொங்கல் திருவிழா நடைபெற்றது. நெல் அறுவடைக்கு பின் கிராமத்தில் உள்ள அந்தரநாச்சியம்மனுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் செவ்வாய் பொங்கல் வைத்து வழிபாடு செய்து மஞ்சுவிரட்டு நடத்துவது வழக்கம். இதில் பெண்கள் யாரும் கலந்து கொள்வதில்லை. இந்த விழாவில் ஆண்கள் காய்கறிகள் மற்றும் பானைகளுடன் மணிமுத்தாற்றுக்கு சென்று நீர் எடுத்து வைத்து பொங்கல் வைத்தனர்.