திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பொது இடங்களில் இருந்த கொடிக்கம்பங்களை அகற்றும் பணி பலத்த பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டது. தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சி இடங்களில் கொடிக்கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டு நாட்களில் நீதிமன்ற அவகாசம் முடிவடையவுள்ள நிலையில் வாணியம்பாடியில் 76 இடங்களில் உள்ள அரசியல் கட்சி மற்றும் பிற அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.