கோவை ரயில் நிலையத்தில் பாட்னாவில் இருந்து கேரளா சென்ற ரயிலில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையில் 20 கிலோ எடையிலான கஞ்சா இருந்ததை கண்டு பயணிகள் அச்சமடைந்த நிலையில், அதனை போலீசார் கைப்பற்றினர். பையை கொண்டு வந்தது யார்? எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது பற்றி போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.