சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கக்கூடாது எனக்கூறி சாலையோரமாக உறங்கிய நபர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பேருந்துக்காக காத்திருந்த மாற்றுத்திறனாளி உள்ளிட்டோர் காயமடைந்த நிலையில், போலீசாரைக் கண்டித்து 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.