சீர்காழியில் தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். புதிய பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பாலசுப்பிரமணியன் என்பவர் மீது சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மோதியது. இது தொடர்பாக பேருந்தின் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.