திருச்சி மருதாண்டாக்குறிச்சி அருகே கள்ளநோட்டு அச்சடித்த நபரை போலீஸார் கைது செய்தனர். ஆளவந்தான் நல்லூர் பகுதியை சேர்ந்த மருத்துவ பிரதிநிதி அனி பவுல்ராஜ் கள்ளநோட்டு அச்சடித்து வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, போலீஸார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது, ஏராளமான 500 ரூபாய் கள்ளநோட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது.