மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள், அதிக விசை கொண்ட நீருந்துகள் பயன்படுத்த வேண்டாம் என கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐதீகப்படி தோல்பைகளில் சிறிய குழாய் பொருத்தி, திரவியங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் ஏதும் கலக்காத சுத்தமான தண்ணீரை மட்டுமே கள்ளழகர் மீது பீய்ச்ச வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வரும் 8ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கள்ளழகர் வைகை ஆற்றில் தங்கக் குதிரையில் இறங்கும் நிகழ்வு வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது.