சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோயிலில் உள்ள முருகன் சன்னதியில், செவ்வாய் கிழமையன்று பெண் பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றியதை கோயில் குருக்கள் தண்ணீர் ஊற்றி அணைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விளக்கு மீது தண்ணீர் ஊற்றி அணைத்த குருக்கள் பாஸ்கர் என்பவரிடம் பெண்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.