ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் திரௌபதி அம்மன் கோவிலில் ஆறுபடை புனித யாத்திரை செல்லும் முருக பக்தர்களின் பால்குட நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. காப்புக்கட்டி விரதமிருந்து பால்குடம் சுமந்து வந்த பக்தர்கள், திரௌபதி அம்மன், விநாயகர், முருகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.