புதுக்கோட்டையில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நபரின் வீட்டில், இறந்தவரின் நண்பர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.நல்வாய்ப்பாக வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்ற மூன்று பேரை கைது செய்த போலீசார், மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.