கரூரில் 3 கிராமங்களை இணைத்து தனி பஞ்சாயத்தாக உருவாக்கி அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் எனக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். நெரூர் வடபாகம் ஊராட்சியில் உள்ள சேனப்பாடி, முனியப்பனூர், மல்லம்பாளையம் ஆகிய கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி, தனி பஞ்சாயத்தாக பிரிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.