கோவை குனியமுத்தூரில் இஸ்லாமியர்கள் வசிக்காத பகுதியில் பள்ளிவாசல் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்ய கோரி, இந்து முன்னணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குனியமுத்தூரில் கிரேஷ் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட மஸ்ஜித் இ ஹிரா எனும் பள்ளிவாசல் செயல்படுவதற்கு, அனுமதி அளித்து கடந்த டிசம்பர் மாதம் கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி நிர்வாகி பிரபாகரன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.