சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அனுமன் காலணி பகுதியில் உள்ள நீர்நிலைகளை 15 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி குடியிருப்புகளை அகற்ற ஜேசிபி இயந்திரத்துடன் சென்ற அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்த மக்களை போலீஸார் சமாதானப்படுத்தினர். இதனையடுத்து, அங்குள்ள வீடுகளை இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.