Also Watch
Read this
By: Web Team

தருமபுரி அருகே பேருந்தில் பெண்களை புகைப்படம் எடுத்த போதை இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இலக்கியம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரனுக்கு திருணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் பென்னாகரத்திலிருந்து தருமபுரிக்கு மதுபோதையில் பேருந்தில் பயணம் செய்த ராஜேந்திரன் பேருந்தில் உள்ள பெண்களிடம் ஆபாசமாக பேசியதோடு அவர்களை புகைப்படம் எடுத்துள்ளார். இதனை கண்டு ஆத்திரமடைந்த சக பயணிகள் அவரை வெளுத்து வாங்கினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved