மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மஞ்சள் வாய்க்காலின் குறுக்கே பாலம் இல்லாததால் மார்பளவு தண்ணீரில் இறங்கி ஆபத்தான முறையில் கடந்து செல்லும் கிராமத்தினர், 7 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.தற்காலிக மூங்கில் பாலமும் சிதிலமடைந்து விட்டதால், கான்கிரீட் பாலம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.