கர்நாடக, ஆந்திரா மாநிலங்களின் அரிசி ரகங்களில் விலை கிலோவிற்கு 10 ரூபாய் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஒரு வருட காலமாக அரிசி விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில், 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட கர்நாடகா பொன்னி 50 ரூபாயாகவும், 55 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆந்திர பொன்னி 44 ரூபாயாகவும் குறைந்துள்ளது.