ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர். முன்னதாக கோவில் மணிமண்டபத்தில் வள்ளி தெய்வானை, பாலமுருகன் சாமிக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.