தமிழகத்தில் 2020ஆம் ஆண்டுக்கு பின் பி.எஸ் 4 வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2020ஆம் ஆண்டுக்கு பின் தடைசெய்யப்பட்ட பி.எஸ்.4 வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டதாக தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த நிலையில், பல அதிகாரிகள் தவறிழைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விசாரணை நிலை குறித்த அறிக்கையை ஜுன் 6ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டது.