திருவள்ளூர் அருகே வெங்கத்தூர் ஊராட்சியை நகராட்சியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் வார்டினை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் எனவும், தங்கள் ஊராட்சியை நகராட்சியோடு இணைக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்தனர்.