திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாநகராட்சி மற்றும் நகராட்சியுடன், கிராம ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாளக்குடி, மாடக்குடி உள்ளிட்ட ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடனும், கீழவாளாடி ஊராட்சியை லால்குடி நகராட்சியுடனும் இணைக்க அரசாணை வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லால்குடி திருச்சி நெடுஞ்சாலையில் மக்கள் பசுமாடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருச்சி சாலையில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.