நாகை மாவட்டம் கோடியக்கரை பறவைகள் சரணாலயம் அருகே சிப்காட் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தென்னடார் கிராமத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை எதிர்த்து, அந்த கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தென்னடார் கிராமத்தில் சிப்காட் அமைந்தால் விளைநிலங்களும், கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.