சென்னையில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய இளைஞருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒரு சவரன் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கினார். அரும்பாக்கத்தில் தேங்கி கிடந்த மழைநீரில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவனை அவ்வழியாக சென்ற கண்ணன் என்ற இளைஞர் காப்பாற்றினார். இளைஞரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இளைஞரை அழைத்து ஒரு சவரன் மோதிரத்தை பரிசாக வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.