தூத்துக்குடி மாவட்டம் மீரான்குளம் பகுதியில் ஆம்னிவேன் கிணற்றில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பேர் பலியான சம்பவத்தை அடுத்து, அந்த கிணற்றின் அருகே தடுப்பு கம்பி அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தையே உலுக்கிய கோர விபத்தை தொடர்ந்து, சாலை ஓரத்தில் உள்ள கிணறுகளை கணக்கெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர், சம்பவம் நடந்த கிணற்றை நேரில் ஆய்வு செய்தனர். அதன் தொடர்ச்சியாக கிணற்றின் அருகே நெடுஞ்சாலை துறை சார்பில் 30 மீட்டர் நீளம், 5 அடி உயரத்தில் தடுப்புக் கம்பி அமைக்கப்படுகிறது.