சேலம் மாவட்டம் சங்ககிரி சுண்ணாம்புகுட்டை அருகே ஆம்னி கார், சாலையோர தென்னை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வேலம்மா வலசு பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவர், தனக்கு சொந்தமான ஆம்னி காரில் சங்ககிரி சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சுண்ணாம்புகுட்டை பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்திலுள்ள தென்னை மரத்தில் மோதியதில் ஆம்னி கார் அப்பளம் போல் நொறுங்கியது.