திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை முழுநிலவு தினத்தன்று அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதால், முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ராஜகோபுரம் முன்பு மற்றும் கோயில் சுற்றியிலும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.