பள்ளிகளில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாதபூஜை செய்ய அனுமதிக்கக் கூடாது என புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அலுவலர் அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக, தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் லீலாவதி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கு முன், பெற்றோர்களுக்கு பாதபூஜை என்ற பெயரில் நடைபெறும் கொடுமைகளை தடுக்க புகார் மனுக்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.