திருநெல்வேலியில் கார் வாங்கி இரண்டு மாதத்தில் அடிக்கடி பழுதாகி பாதி வழியில் நிற்பதாக பிரபல கார் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் - புவனா தம்பதியர் திருநெல்வேலியில் உள்ள ஆதி மாருதி கார் ஷோரூமில் கடந்த அக்டோபர் மாதம் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பலினோ காரை வாங்கியுள்ளார். கார் வாங்கி அடிக்கடி பழுதாகிய நிலையில் ஷோரூம் அதிகாரிகள் முறையாக பதில் அளிக்க மறுப்பதாகவும், பெட்ரோலில் கலப்படம் இருப்பதாக கூறுவதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.