நெல்லை தச்சநல்லூரில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நெல்லையப்பர் திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் காலை, மாலை என சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றன. ஒன்பதாம் நாள் திருவிழாவில், பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளிய சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றதையடுத்து திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்று வழிபட்டனர்.