திருச்சி மாவட்டம் மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவில் திரளானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட ரதங்கள் ஊர்வலமாக வர சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த திரளான மக்கள் பூந்தட்டுக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாத்தி வழிபாடு செய்தனர்.