திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இந்த உற்சவத்தில் அலங்கரிக்கப்பட்ட நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளி வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மனமுருகி பெருமாளை தரிசனம் செய்தனர்.