திருச்சியில் நாம்தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற ”அண்ணனுடன் ஆயிரம் பேர்” நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, மதிய உணவாக சுடச்சுட மட்டன் பிரியாணியும், சிக்கன் கிரேவியும் பரிமாறப்பட்டது. இதற்காக 200 கிலோ மட்டனை கொண்டு 1500 பேர் சாப்பிடும் வகையில் மணக்க மணக்க பிரியாணியும், 120 கிலோ கோழி இறைச்சியைக் கொண்டு சிக்கன் கிரேவியும் தயார் செய்யப்பட்டது.